Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த ராமேஸ்வத்திற்கு இலவச பேருந்து

அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த ராமேஸ்வத்திற்கு  இலவச பேருந்து
, செவ்வாய், 28 ஜூலை 2015 (16:56 IST)
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு  சென்னையில் இருந்து இலவச பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று மாரடைப்பால் காலமானார். டில்லியிலிருந்து நாளை காலை அவரது உடல் ராமேஸ்வரம் கொண்டுவரப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது இறுதிச் சடங்கு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கலாமுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு இலவச பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் அப்துல் கனி என்பவர்  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கலாமுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இலவச பேருந்து சேவையை ஏற்பாடு செய்துள்ளோம். இதற்காக அவர் பர்வீன் டிராவல்ஸ் நிறுவனம் 2 பேருந்துகளை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலை 10 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இலவச பேருந்தில் ராமேஸ்வரம் செல்வரகளுக்கு தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil