Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை மக்களுக்கு குடிநீர் வழங்கும் பிரான்ஸ் நிறுவனம்: ஸ்டாலின் எதிர்ப்பு

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (19:53 IST)
பொதுமக்களுக்கு இதுவரை குடிநீரை நகராட்சி, மாநகராட்சி ஆகிய அரசு அமைப்புகளே வழங்கி வந்த நிலையில் தற்போது கோவையில் குடிநீர் வழங்கும் உரிமையை பிரான்ஸ் நிறுவனம் ஒன்றுக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கோவை மாநகராட்சியின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
 
கோவை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை பிரான்ஸ் நாட்டின் சுயல் என்ற நிறுவனத்துக்கு ரூ.3,150 கோடிக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்கு திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
கோவை மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமையை தனியார் நிறுவனத்துக்கு அரசு தருவதா? என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின் உடனடியாக இந்த நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
முன்னதாக கோவை மாநகராட்சிக்கு 26 ஆண்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய ரூ.3150 கோடிக்கு ஃபிரான்சின் சுயல் நிறுவனத்திற்கு அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த தனியார் நிறுவனம் அதிகளவு பொதுமக்களிடம் இருந்து குடிநீர் கட்டணம் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments