Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முறிந்து போன காதல் திருமணம் : தூக்கிட்ட மனைவி ..காணாமல் போன கணவர்!

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (16:49 IST)
திருவாரூர் மாவட்டம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கிடையே தகராறு ஏற்பட்டதால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள ருச்சிபாளையம் கிராமத்தில் வசித்துவந்தவர் சிவக்குமார். இவரது மனைவி குணசுந்தரி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டர். இரு வீட்டுப் பெற்றோரையும் எதிர்த்து திருமணம் செய்துகொண்டதால் தனியாக வசித்துவந்தனர்.
 
இந்நிலையில் திருமணம் ஆன நாளிலிருந்து இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை இருந்துள்ளதாகத் தெரிகிறது. நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
தற்போது, குணசுந்தரியின் மரணத்திற்குப் பின்னர் அவரது கணவர் சிவக்குமாரை காணாததால் போலிஸார் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினரின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments