Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் i-Pad-களை தயாரிக்க Foxconn நிறுவனம் முடிவு..!

Senthil Velan
வெள்ளி, 26 ஜூலை 2024 (14:04 IST)
ஐபோன்களை தொடர்ந்து ஐபேட்களும் தயாரிக்க தமிழகத்தில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில்  ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
 
இந்நிலையில் ஐபோன்களை தொடர்ந்து ஐ-பேட்களையும் இந்த ஆலையில் இருந்து தயாரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2 ஆண்டுகளில் ஆலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
அதன்படி, ஆப்பிள் நிறுவன இதர தயாரிப்புகளையும் தமிழகத்திலேயே உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் மேக் மடிக்கணினிகளை உற்பத்தி செய்யும் திட்டம்  தற்போது இல்லை என பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ALSO READ: சவுக்கு சங்கர் வழக்கிலிருந்து விலகிய நீதிபதிகள்.! வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை.!!

ஐபேட்களை தயாரிக்கும் முடிவால் கணிசமான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என தமிழக அரசின் தொழில்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments