Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் ஆயுதங்களுடன் ரகளை: காவல்நிலையத்தில் கண்ணீர் சிந்திய மாணவர்கள்

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (14:44 IST)
சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் சென்னை புறநகர் ரயிலில் கத்தி, பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஓடும் ரயிலில் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு வைரலான நிலையில் காவல்துறையினர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.



 
 
இதுகுறித்த விசாரணையில் ஃபேஸ்புக் வீடியோவில் உள்ள மாணவர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டனர். முதல்கட்டமாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இன்னும் சில மாணவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை தரப்பினர் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்கள் போலீசார் முன்னிலையில் கண்ணீர் விட்டு கதறி அழுது தங்களை மன்னித்துவிடும்படி கெஞ்சினர். இனிமேல் வாழ்க்கையில் ரயிலில் வரமாட்டோம் என்றும் இந்த ஒருமுறை தங்களை மன்னித்துவிடும்படி கதறி அழுத காட்சியும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments