Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மீண்டும் ஓர் பயங்கரம்: 4 பேர் பரிதாப பலி!

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மீண்டும் ஓர் பயங்கரம்: 4 பேர் பரிதாப பலி!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (08:09 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டது.


 
 
இந்த ரயில் நிலையத்தில் நடந்த அந்த கோர சம்பவம் குறித்தான வழக்கு இன்னமும் முடியாத நிலையில், அதே ரயில் நிலையத்தில் மீண்டும் ஓர் கோர சம்பவம் நடந்துள்ளது.
 
நேற்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 வடமாநில இளைஞர்கள் பரிதாபமாக பலியானார்கள். தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது மின்சார ரயில் வந்ததால், 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
 
இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments