Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மீண்டும் ஓர் பயங்கரம்: 4 பேர் பரிதாப பலி!

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மீண்டும் ஓர் பயங்கரம்: 4 பேர் பரிதாப பலி!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (08:09 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டது.


 
 
இந்த ரயில் நிலையத்தில் நடந்த அந்த கோர சம்பவம் குறித்தான வழக்கு இன்னமும் முடியாத நிலையில், அதே ரயில் நிலையத்தில் மீண்டும் ஓர் கோர சம்பவம் நடந்துள்ளது.
 
நேற்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 வடமாநில இளைஞர்கள் பரிதாபமாக பலியானார்கள். தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது மின்சார ரயில் வந்ததால், 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
 
இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments