Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி: அடிவாங்கிய தர்பூசணி வியாபாரம் – விவசாயிகள் வேதனை!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (13:26 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தர்பூசணி வியாபாரம் தடைப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்தும் மாநில எல்லைகளிலேயே தடை செய்யப்படுகின்றன.

தற்போது கோடைகாலம் என்பதால் இந்த காலங்களில் தர்பூசணி வியாபாரம் களைகட்டும் என்பதால் புதுக்கோட்டை வியாபாரிகள் தங்கள் வயல்களில் தர்பூசணி பயிரிட்டுள்ளனர். இங்கு பயிரிடப்படும் தர்பூசணிகள் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தர்பூசணி அறுவடை செய்தாலும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கஜா புயலினால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பிரச்சினையால் தர்பூசணி வியாபாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், இதனால் தர்பூசணி பழங்கள் அறுவடை செய்யாமலே வீணாகி வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments