Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி தினகரன் ஒரு பொருட்டே இல்லை: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஜெயக்குமார்..!

Mahendran
வியாழன், 25 ஜனவரி 2024 (12:47 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்ய அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று கூடியது 
 
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிய போது, ‘அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக தமிழகத்தில் இருக்கும், மாநில உரிமையை பேணி காக்கும் தேர்தல் அறிக்கையாக இருக்கும்.
 
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. உரிய நேரத்தில் அதிமுக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்
 
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை, மண்டல வாரியாக மக்கள் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க அதிமுக திட்டம் போடப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டை 7 மண்டலங்களாக பிரித்து மக்களிடம் அதிமுக கருத்து கேட்க உள்ளது. அதன்பின்னர் சூப்பர் ஹீரோ தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments