Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பாஜகவில் இணைகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை: பரபரப்பு தகவல்

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (08:59 IST)
கடந்த சில மாதங்களாகவே பிரபலங்கள் பாஜகவில் இணைவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஐபிஎஸ் பதவியை இராஜினாமா செய்த அண்ணாமலை, விரைவில் காங்கிரஸில் இணைவார் என கூறப்பட்டது. இந்த தகவல் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது
 
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டா அவர்களை சந்தித்து அவர் முன் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே கடந்த மாதமே பாஜகவில் அமித்ஷா முன்னிலையில் இணைய திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் ஆனால் திடீரென அமித்ஷா கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் பாஜகவில் இணைவது ஒத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாஜகவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் அண்ணாமலை இணைய இருப்பதாகவும் இதற்காக அவர் டெல்லி சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களும் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது 
 
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் திடீரென தற்போது அவர் பாஜகவில் இணைவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவில் அண்ணாமலை இணைந்தாலும் ரஜினி கட்சிக்கு ஆதரவாகவே அவர் செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments