Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு.க.அழகிரி மனைவி காந்தி அழகிரி மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

மு.க.அழகிரி மனைவி காந்தி அழகிரி மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
, வெள்ளி, 17 ஜூலை 2015 (02:20 IST)
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மீதான  நில முறைகேடு வழக்கை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் ராமமூர்த்தி என்பவரின் குடும்பத்திற்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி முறைகேடாக வாங்கியதாகக் கூறி, ராமமூர்த்தியின் மனைவி ராஜேஸ்வரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
 
அதன் பேரில், மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி காந்தி அழகிரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனு, நீதிபதி சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலம் தொடர்பான வழக்கில் காந்தி அழகிரி மீது புகார் அளித்த ராஜேஸ்வரி சமாதானமாகச் செல்வதாகக் கூறியதை அடுத்து, காந்தி அழகிரி மீதான வழக்கை நீதிபதி ரத்துச் செய்து உத்தரவிட்டார். 
 

Share this Story:

Follow Webdunia tamil