Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வனத்துறைக்கு தண்ணி காட்டும் அரிசி ராஜா! தொடரும் தேடல்!

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (10:42 IST)
கோவை அருகே காட்டுப்பகுதியில் தொடர்ந்து நாசத்தை விளைவித்து வரும் அரிசிராஜா யானையை பிடிக்க முடியாமல் வனத்துறை திணறி வருகிறது.

கோயம்புத்தூர் அருகே அர்த்தநாரிப்பாளையத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கும் காட்டு யானை அரிசிராஜா, அடிக்கடி ஊர் பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். கடந்த 3 மாத காலங்களில் அரிசிராஜாவின் அராஜகம் அதிகரித்துவிட்டதாக மக்கள் வனத்துறையிடம் முறையிட்டுள்ளனர்.

அதன்படி ஆபரேஷன் அரிசிராஜா என்ற திட்டத்தின் படி அரிசிராஜாவை பிடித்து சின்னதம்பி யானையை போல் பயிற்சி கொடுத்து பழக்கப்படுத்தலாம் என திட்டமிடப்பட்டது. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் வனத்துறை கண்ணில் மண்ணை தூவி தலைமறைவாக இருந்து வருகிறது அரிசிராஜா.

தொடர்ந்து அரிசிராஜாவை பிடிக்க ட்ரோன் கேமராக்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments