Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வனத்துறைக்கு தண்ணி காட்டும் அரிசி ராஜா! தொடரும் தேடல்!

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (10:42 IST)
கோவை அருகே காட்டுப்பகுதியில் தொடர்ந்து நாசத்தை விளைவித்து வரும் அரிசிராஜா யானையை பிடிக்க முடியாமல் வனத்துறை திணறி வருகிறது.

கோயம்புத்தூர் அருகே அர்த்தநாரிப்பாளையத்தில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கும் காட்டு யானை அரிசிராஜா, அடிக்கடி ஊர் பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். கடந்த 3 மாத காலங்களில் அரிசிராஜாவின் அராஜகம் அதிகரித்துவிட்டதாக மக்கள் வனத்துறையிடம் முறையிட்டுள்ளனர்.

அதன்படி ஆபரேஷன் அரிசிராஜா என்ற திட்டத்தின் படி அரிசிராஜாவை பிடித்து சின்னதம்பி யானையை போல் பயிற்சி கொடுத்து பழக்கப்படுத்தலாம் என திட்டமிடப்பட்டது. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் வனத்துறை கண்ணில் மண்ணை தூவி தலைமறைவாக இருந்து வருகிறது அரிசிராஜா.

தொடர்ந்து அரிசிராஜாவை பிடிக்க ட்ரோன் கேமராக்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments