Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

Siva
ஞாயிறு, 19 மே 2024 (07:30 IST)
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பிரதோஷ தினத்தில் சதுரகிரிக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வரும் நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து வைகாசி மாத பிரதோஷத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பிரதோஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருவார்கள் என்பதும் ஆனால் அதே நேரத்தில் மழைக்காலங்களில் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பதன் தெரிந்தது.

இந்த நிலையில் வைகாசி மாத பிரதோஷத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த  நிலையில் திடீரென தற்போது பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருவதை அடுத்து வைகாசி பிரதோஷத்திற்கு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ஷ்ட அடைந்துள்ளனர்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments