Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் வேண்டும்!! – மத்தியில் அமைச்சர் கோரிக்கை

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (18:49 IST)
தமிழகத்தில் நிலவிடும் மண்ணெண்ணெய் பற்றாக்குறையை தவிர்க்க அதை முழுமையாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் அமைச்சர் காமராஜ்.

தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் இன்று டெல்லிக்கு சென்றார். அங்கு நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பு குறித்து கூறிய அவர் “தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மண்ணெண்ணெய் தட்டுபாட்டை போக்க முழுமையாக மண்ணெண்ணெய் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுள்ளேன். ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தவிர்க்க வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.

தற்போது எரிபொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பஞ்சத்தால் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட உள்ளது. கேஸ் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு 6 லிட்டருக்கு பதிலாக 3 லிட்டரும், ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு 3 லிட்டருக்கு பதில் 1 லிட்டரும் மண்ணெண்ணெய் வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments