Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதித்துறையின் நெறிமுறைகளை கடைப்பிடியுங்கள்..! மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

Senthil Velan
சனி, 20 ஏப்ரல் 2024 (12:19 IST)
நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியக்கூடிய நீதிபதிகள் மீது சில புகார்கள் வந்ததையடுத்து, அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 
 
அதில், நீதித்துறை நடவடிக்கைகள் மூலம் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்களுடன் நெருக்கமாக இருப்பதை நீதிபதிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தேவையின்றி வழக்கறிஞர், சங்க நிர்வாகிகளுடன் செல்போனில், சேம்பரில் பேசுவதை நீதிபதிகள் தவிர்க்கவும், பொதுமக்களின் பார்வையில் உள்ளோம் என்று எப்போதும் விழிப்புடன் நீதிபதிகள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரபட்சமற்ற நடவடிக்கை மூலம் மக்களின் நம்பிக்கையை உறுதிபடுத்த வேண்டும் என்று தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார். 

ALSO READ: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சனாதனம்.! உதயநிதிக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்..!!
 
மேலும், நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு, நெறிமுறைகளை கடைபிடிக்காவிடில் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் தலைமை பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments