ஏடிஎம் மிஷினில் நிரப்ப எடுத்து செல்லப்பட்ட ரூ.74.5 லட்சம் பறிமுதல்.. பறக்கும் படை அதிரடி..!

Mahendran
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (14:03 IST)
தேர்தல் நேரம் என்பதால் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லும் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் ஏடிஎம் மிஷினில் நிரப்ப கொண்டு சென்ற 74.5 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அருகே  தனியார் ஏடிஎம்மில் நிரப்புவதற்காக இண்டிகா காரில் ரூபாய் 74.5 ரூபாய் பணம் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்

காரில் இருந்த பணத்தைவிட அதிக பணத்திற்கு ஆவணங்கள் இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
அதாவது காரில் எடுத்துச் சென்றது ரூபாய் 74.5 லட்சம் என்ற நிலையில் அதை எடுத்துச் சென்றவர்களிடம் ஒரு கோடிக்கான ஆவணங்கள் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும் இது குறித்து விசாரணை செய்வதற்காகவே பணத்தை பறிமுதல் செய்துள்ளதாகவும் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஏடிஎம்மில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட பணம் கூட பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments