Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2200.. திருக்கார்த்திகையை முன்னிட்டு ஜெட் வேகத்தில் உயர்ந்த விலை..!

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2023 (12:07 IST)
இன்று திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு ஒரு கிலோ மல்லிகை பூ  2,200 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
விசேஷ நாட்களில் பூக்களின் விலை கடும் உயர்வு ஆக இருக்கும் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பூக்களின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது 
 
மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு என உயர்ந்துள்ளதாகவும் நேற்று ஒரு கிலோ 1800 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ இன்று 400 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 2200 என விற்பனை ஆகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதேபோல் நேற்று ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் இன்று 1200 ரூபாய்க்கு விற்பனை ஆவதாகவும்  நேற்று  800 ரூபாய்க்கு விற்பனையான முல்லை, பிச்சி பூக்களும் இன்று ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது. கார்த்திகை தீபத்தை ஒட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

இரும்புக்கை மாயாவி.. தமிழ் காமிக்ஸ் சகாப்தம் மறைந்தார்! - காமிக்ஸ் ரசிகர்கள் அஞ்சலி!

இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலின் மறு உருவம் தான் அமித்ஷா: ஆர்பி உதயகுமார்

லாரி கவிழ்ந்து விபத்து! சாலையில் சிதறிய தர்பூசணிகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

வெளியே வராதீங்க! இன்று முதல் கொளுத்தப் போகும் கடும் வெயில்! 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments