Webdunia - Bharat's app for daily news and videos

Install App

69 அடியை எட்டிய வைகை அணை: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (08:03 IST)
வைகை அணையில் 69 அடி நீர்மட்டம் எட்டியதை அடுத்து ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வைகை அணையின் முழு கொள்ளளவு 71 அடி என்ற நிலையில் தற்போது 69 அடியாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மதுரை மற்றும் தென்  மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததன் காரணமாக வைகை அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. '

இதையடுத்து தற்போது 69 அடி என்ற நிலையில் உபரி நீர் அதிகமாக திறந்து விடப்படுவதால் வைகை கரையில் உள்ள ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை, தேனி, ராமநாதபுரம்,  திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்ட மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீரின் வரத்திற்கு ஏற்ப உபரி நீர் வெளியேற்றப்படும் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக நீர்வளத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments