Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ள சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ளை: 60 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை..!

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (14:56 IST)
வெள்ள சூழ்நிலையை பயன்படுத்தி பூட்டிய வீட்டிற்குள்  கொள்ளை நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பலர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இதனை பயன்படுத்தி மர்ம கும்ப கும்பல் ஒன்று சில வீடுகளில் அடித்த கொள்ளை மதிப்பு லட்சக்கணக்கில் உள்ளதாக கூறப்படுகிறது.  

சென்னை அடுத்த வரதராஜபுரத்தில் வெள்ளம் நிலை காரணமாக ஆறு வீடுகள் வரிசையாக போட்டி கிடந்தன. இதையடுத்து அந்த ஆறு வீடுகளின் பூட்டுகளை உடைத்து 60 சவரன் நகை, 3 லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.  

வீட்டை சுற்றி வெள்ளம் இருந்ததால் வீட்டை பூட்டிவிட்டு உயிர் பயத்தில் மக்கள் வெளியேறிய நிலையில் வெள்ளம் வடிந்த பின்னர் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது பணம் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments