Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகள் சரியில்லை: சொல்வது குஷ்பு

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2015 (05:10 IST)
தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகள் முறையாக நடைபெறவில்லை என நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் மிதந்தது. இந்த நிலையில், சென்னை பெரம்பூர், மேட்டுப்பாளையம், கோவிந்தன் தெரு, அருந்ததியர் நகர் ஆகிய பகுதிகளில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு  ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேஷ்டி மற்றும் சேலை மற்றும் போர்வை ஆகியவற்றை வழங்கினர்.
 
அப்போது, அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு  செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான உதவிகளை செய்யவில்லை. குறிப்பாக, வெள்ள நிவாரண பணிகள் முறையாக நடைபெறவில்லை. வெள்ள நிவாரண பணிகளுக்காக தமிழர அரசு ரூ.500 கோடி மிகவும் குறைவான தொகை ஆகும் என்றார். 

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

Show comments