Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.25 கோடி நிதி உதவி செய்த உத்தர பிரதேச முதலமைச்சருக்கு ஜெயலலிதா நன்றி கடிதம்

Webdunia
சனி, 12 டிசம்பர் 2015 (13:57 IST)
தமிழக வெள்ள நிவாரணத்திற்கு 25 கோடி ரூபாய் நிதி உதவிய செய்த உத்தர பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்க்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். 


 

 
அந்க கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:–
 
தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அதற்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உங்களது சிறப்பான பங்களிப்பாக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து வழங்கியதற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
 
எனது தலைமையிலான தமிழக அரசு, தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் இயல்பு நிலையை கொண்டு வர தொடர்ந்து தீவிரமாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் தங்களது சிறப்பான பங்களிப்புக்காக மீண்டும் ஒரு தடவை இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments