Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ள நிவாரண நிதி யார் யாருக்கு கிடைக்கும்? சென்னை மக்களுக்கான முக்கிய தகவல்..!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (15:26 IST)
சென்னையில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்த நிலையில் இந்த நிதி யார் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னையில் குடியிருக்கும் ரேஷன் அட்டை வைத்திருப்போர் மற்றும் ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போர், ரேசன் அட்டை விண்ணப்பம் ஏற்கப்பட்டு கடை ஒதுக்கப்பட்ட நபர்களுக்கு  நிவாரண நிதி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையில் வாடகை வீட்டில் இருக்கும் நபர்கள் வாடகை ஒப்பந்தம் வைத்திருந்தாலோ,  கேஸ் பில் வைத்திருந்தாலோ,  ஆதார் அட்டை வைத்திருந்தாலோ,  சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வந்தாலோ நிவாரண நிதி கிடைக்கும்.

இந்த நிவாரண நிதிக்கான டோக்கன் டிசம்பர் 16ஆம் தேதி முதல் வழங்கப்பட இருப்பதாகவும், டிசம்பர் 20ஆம் தேதி முதல் நிவாரண நிதி கிடைக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments