Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: அனைத்து அருவிகளில் குளிக்கத் தடை.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!

Siva
திங்கள், 15 ஜூலை 2024 (11:16 IST)
குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அடுத்து சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதை அடுத்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்ததை அடுத்து அதிக அளவு தண்ணீர் வருவதாகவும், இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அருவிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை அடுத்து பாதுகாப்பை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அருவியில் தண்ணீர் குறைந்த பிறகு மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் தண்ணீர் நன்றாக வருகிறது என்ற கேள்விப்பட்டு வந்த சுற்றுலா பயணிகளுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா பயணிகள் பாராட்டு வருகின்றனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments