Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெருமாள் ஏரி நிரம்பியது: ​கடலூரில் 25 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (19:49 IST)
கடலூரில் உள்ள பெருமாள் ஏரியிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர், வெளியேற்றப்படுவதால் அப்பகுதியில் உள்ள 25 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 
வடகிழக்கு பருவமழையால் கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்புகுள்ளாயுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. தொடர் கனமழையால் கடலூர் அருகே உள்ள பெருமாள் ஏரி முற்றிலும் நிரம்பி விட்டது. இதனால் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரங்களில் வசிக்கும் 25 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இதனையடுத்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட  நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பணிகயை அப்பகுதி மக்களே செய்து வருகின்றனர். மேலும், இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களை மீட்கும் பணியை ராணுவ வீரர்கள் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சிகிச்சைக்காக வந்தவரை திருடர் என நினைத்து அடித்து கொலை.. 12 மருத்துவமனை ஊழியர்கள் கைது..!

பிரதமர் வருகை எதிரொலி: கடலோர காவல்துறை கட்டுப்பாட்டில் குமரிக்கடல் ..!

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Show comments