Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்.. மதுரையில் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 25 அக்டோபர் 2024 (07:32 IST)
மதுரையில் பெய்த கனமழை காரணமாக, இரண்டு விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து கொண்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மதுரையில் கனமழை பெய்து வருவதால், மதுரை நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக மதுரையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை வந்த இரண்டு இண்டிகோ விமானங்கள் மழை காரணமாக தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், சில நிமிடங்கள் அந்த விமானங்கள் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தன.

இந்த நிலையில், ஒரு விமானம் தேனி அருகே வட்டமடித்துக் கொண்டிருந்ததோடு, இன்னொரு விமானம் திருமங்கலம் அருகே வட்டமடித்துக் கொண்டிருந்தது. பின்னர், சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரையில் இரு விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தது, அந்த பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments