Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி விமான நிலையத்தில் சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு கிளம்பிய விமானத்தால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (07:37 IST)
திருச்சி விமான நிலையத்தில் சுற்று சுவரை உடைத்து கொண்டு விமானம் ஒன்று பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.20 மணிக்கு திருச்சியிலிருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளில் அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானியின் கட்டுப்பாட்டை மீறி அந்த விமானம் விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு மேலே பறந்தது.

130 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் சுமார் 4 மணி நேர பயணத்திற்கு பின்னர் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இதனையடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த விமானம் திடீரென கோளாறு ஏற்பட்டது ஏன்? என்று விரிவான விசாரணை நடத்த விமான நிலைய உயரதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இந்த விமானத்தில் பயணம் செய்த 130 பயணிகளுக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments