Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது: பிரதமருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம்

மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது: பிரதமருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம்
, புதன், 8 அக்டோபர் 2014 (15:17 IST)
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்த கடிதத்தில், “ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் சென்ற படகு நடுக்கடலில் பழுதாகி நின்றதால் தவித்துக் கொண்டிருந்த மீனவர்களை அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
 
இவர்களுடன் சேர்த்து இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 24 பேரையும், 75 படகுகளையும் உடனடியாக விடுவிக்க பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
தமிழக மீனவர்களின் லட்சக்கணக்கான மதிப்புள்ள படகுகள் இலங்கை வசம் உள்ளது. அவற்றை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை பாதுகாக்க வேண்டும்“ இவ்வாறு அந்தக் கடிதத்டிதல் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil