Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

34 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா கடிதம்

34 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா கடிதம்
, செவ்வாய், 27 அக்டோபர் 2015 (19:19 IST)
இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 34 பேரை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு  நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம் இருக்கிறார்.


 

இராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 34 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்கு இலங்கை கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று இலங்கை நீதிமன்றத்தில் அஜர்படுத்தியுள்ளனர். அவர்களை நவம்பர் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

தமிழக மீனவர்கள் 34 பேரையும், 7 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை சிறையில் இருந்து நாளை விடுவிக்கப்படும் 86 தமிழக மீனவர்களுடன் சேர்த்து நேற்று கைதான 34 மீனவர்களையும் விடுவிக்க மத்திய வெளியுறவு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil