Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்றே இறைச்சி கடையில் குவிந்த கூட்டம்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (22:05 IST)
ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் கடந்த வாரம் சனிக்கிழமை மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளில் கூட்டம் குவிந்தது என்பதும் அங்கு கூடிய பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் மாஸ்க் அணியாமல் இருந்ததால் மிகப்பெரிய அளவில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டது
 
இதனை அடுத்து தமிழக அரசு அதிரடியாக சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் இறைச்சிக் கடைகள் மூட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களும் மீன் உள்பட இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்பதால் இன்று வெள்ளிக்கிழமை என்று கூட பாராமல் மீன் மார்க்கெட்டில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
அரசு என்னதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் பொது மக்கள் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸை வெல்ல முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments