Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு முழுவதும் வெறிச்சோடிய சென்னை சாலைகள்: அதிகாலையில் குவிந்த மக்கள்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (07:13 IST)
இரவு முழுவதும் வெறிச்சோடிய சென்னை சாலைகள்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் ஆனதை அடுத்து சென்னையின் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன 
 
சென்னையில் 200 இடங்களில் வாகன தடுப்பு சோதனை மையம் அமைக்கப்பட்டிருந்ததை அடுத்து வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து நேற்று சென்னையை பொருத்தவரை வெளியே யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் காத்திருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இன்று அதிகாலை 4 மணிக்கு பேருந்துகள் ஓடத் தொடங்கியதும் பயணிகள் தங்களுடைய ஊருக்கு செல்ல தொடங்கினர் 
 
வெளியூர் செல்லும் பேருந்துகளும் அதிகாலை இயக்கப்பட்டது என்பதும் ஆனால் அதே நேரத்தில் கூட்டம் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது வெளிமாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் நிலையத்தில் குவிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மொத்தத்தில் முதல் நாள் இரவு நேர ஊரடங்கு சென்னையை பொருத்தவரை சுமுகமாக நடந்தது என்பதும் அதிகாலை முதல் இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments