Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பெருங்குடி அருகே பறக்கும் ரயிலில் தீ விபத்து-வீடியோ இணைப்பு

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (10:02 IST)
சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில், பெருங்குடி அருகே சென்றபோது ரயிலின் ஒரு பெட்டியில் தீபிடித்தது.


 


வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்றுகொண்டிருந்த பறக்கும் ரயில் பெருங்குடி ரயில் நிலையம் அருகே சென்றபோது, அந்த ரயிலின் 5 ஆவது ரயில் பெட்டியில் திடீரென தீ பிடித்தது.
 
அந்த பெட்டியில் 15 க்கும் குறைவான பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர். உடனே, பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர். இதனால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 
 
இதைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பெட்டி முழுவதுமாக எரிந்துள்ள நிலையில், அந்தப் பெட்டி ரயிலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டுள்ளது.


 

 
இந்த விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இன்று விடுமுறை நாள் என்பதால், பயணிகள் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments