Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை பெருங்குடி அருகே பறக்கும் ரயிலில் தீ விபத்து-வீடியோ இணைப்பு

சென்னை பெருங்குடி அருகே பறக்கும் ரயிலில் தீ விபத்து-வீடியோ இணைப்பு
, புதன், 21 அக்டோபர் 2015 (10:02 IST)
சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில், பெருங்குடி அருகே சென்றபோது ரயிலின் ஒரு பெட்டியில் தீபிடித்தது.


 


வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்றுகொண்டிருந்த பறக்கும் ரயில் பெருங்குடி ரயில் நிலையம் அருகே சென்றபோது, அந்த ரயிலின் 5 ஆவது ரயில் பெட்டியில் திடீரென தீ பிடித்தது.
 
அந்த பெட்டியில் 15 க்கும் குறைவான பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர். உடனே, பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர். இதனால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 
 
இதைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பெட்டி முழுவதுமாக எரிந்துள்ள நிலையில், அந்தப் பெட்டி ரயிலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டுள்ளது.

webdunia

 

 
இந்த விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இன்று விடுமுறை நாள் என்பதால், பயணிகள் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this Story:

Follow Webdunia tamil