Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப்பேரவை நுழைவு வாயிலில் திடீரென தீ அலாரம்: பெரும் பரபரப்பு..!

Mahendran
வெள்ளி, 2 மே 2025 (12:38 IST)
தமிழக சட்டசபையில் நுழைவாயிலில் திடீரென தீ அலாரம் ஒலித்ததை அடுத்து, சட்டப்பேரவை ஊழியர்கள் மற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் அச்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை தலைமைச் செயலக சட்டப்பேரவை வளாக நுழைவாயிலிற்கு அருகில், தீயணைப்பு துறையினரால் தீ விபத்து முன்னெச்சரிக்கைக்காக அலாரம் பொருத்தப்பட்டிருந்தது. இன்று காலை அந்த அலாரம் திடீரென ஒலித்ததால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
 
இது குறித்து காவல்துறையினர் விசாரித்ததில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த அலாரம் ஒலித்தது என்பது உறுதி செய்யப்பட்டது. தலைமைச் செயலக மற்றும் சட்டப்பேரவை வளாகத்தில் எந்தவிதமான தீவிபத்து அல்லது அசம்பாவிதமும் நிகழவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, மீண்டும் தீ விபத்து முன்னெச்சரிக்கைக்கான அலாரம் இயல்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. சில நிமிட பரபரப்புக்கு பிறகு, தற்போது நிலைமை இயல்பாக உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிபரை காட்டிக்குடுத்தா லைஃப் டைம் செட்டில்மெண்ட்! அமெரிக்கா அறிவுப்புக்கு வெனிசுலா அதிபர் பதிலடி!

மாதாந்திர மின் கட்டண முறை எப்போது? அமைச்சர் சிவசங்கர் முக்கிய தகவல்..!

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையீடு..

சென்னை சூளைமேடு மழைநீர் கால்வாயில் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலம்: மாநகராட்சியில் பரபரப்பு

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு: மத்திய அரசுக்கு CPI இரா.முத்தரசன் வேண்டுகோள்

அடுத்த கட்டுரையில்
Show comments