Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை அடுத்து விழுப்புரத்திலும் தீவிபத்து: சென்னை சில்க்ஸ் கடைக்கு ஏற்பட்ட சோதனை

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (22:27 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை தி.நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் நகை மாளிகையின் பிரமாண்டமான கட்டிடம் தீப்பிடித்து அந்த கட்டிடம் முற்றிலும் இடிந்தது. அதில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள், ஜவுளிகள் தீக்கிரையாகின. இந்த தீவிபத்தின் அதிர்ச்சியே இன்னும் மறைவதற்குள் தற்போது அதே நிறுவனத்தின் மற்றொரு கடை தீப்பிடித்துள்ளது.

விழுப்புரத்தில் இயங்கி கொண்டிருந்த தி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தகவல் தெரிய வந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க போராடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்த கட்டிடத்தின் 4 வது மாடியில் சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது இந்த தீவிபத்து மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையை அடுத்து விழுப்புரத்திலும் சென்னை சில்க்ஸ் கடை தீப்பிடித்தது அந்நிறுவனத்திற்கு ஏற்பட்ட சோதனையாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments