Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் அரவிந்த்சாமியின் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தீ விபத்து

நடிகர் அரவிந்த்சாமியின் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தீ விபத்து
, செவ்வாய், 1 மார்ச் 2016 (16:03 IST)
நடிகர் அரவிந்த்சாமி நடத்தும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 கம்ப்யூட்டர்கள் உட்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகின.


 

 
நடிகர் அரவிந்த்சாமி சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள, கட்டித்தின் இரண்டாவது மாடியில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
 
அவரின் நிறுவனம் செயல்பட்ட இரண்டாவது மாடியிலிருந்து, இன்று அதிகாலை 3 மணியளவில் கரும்புகை வெளிப்பட்டது. இதை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஐந்து வண்டிகளில் அங்கு விரைந்து வந்து, நீண்ட நேரம் போராடி அங்கு எரிந்த தீயை அணைத்தனர். 
 
இந்த தீ விபத்தினால், அவரது நிறுவனத்தில் இருந்த 20 கம்ப்யூட்டர்கள் மற்றும் ஏராளமான பொருட்கள் தீயில் கருகியது. அதன் மதிப்பு பல லடசம் ரூபாயாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
அங்கு ஏற்பட்ட மின் கசிவின் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil