Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்
, செவ்வாய், 26 மே 2015 (12:53 IST)
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிவலிங்கபட்டியில் செயல்பட்டு வரும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வைக்கபபட்டு இருந்த அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இது பக்கத்து அறைகளுக்கும் பரவியதால் அங்கிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. 
 
வெடி விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலைக்குள் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். 
 
சம்பவ இடத்துக்கு 108 ஆம்புலன்சுகளும் வர வழைக்கபபட்டுள்ளன. தீயணைப்பு படையினர் துரித மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இ ந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil