Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (12:51 IST)
கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு நடைபெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். இவரது உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி, கிண்டி காமராஜர் நினைவிடத்தில் அவரை உடலை புதைக்க அரசு நிலம் ஒதுக்கியது. 
 
திமுக தரப்பில் இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கருணாநிதியின் உடலை மெரினாவில் புதைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
அண்ணா சமாதிக்கு பின்புறத்தில் கருணாநிதியின் உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடைபெறப்போவதாக திமுக வட்டாரங்கள் கூறியுள்ளது. ராஜாஜி ஹாலிலிருந்து மெரினாவிற்கு ராணுவ வாகனத்தில் அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments