Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் விஜய் சேதுபதி மீது பட தயாரிப்பு நிறுவனம் புகார்

நடிகர் விஜய் சேதுபதி மீது பட தயாரிப்பு நிறுவனம் புகார்
, சனி, 1 நவம்பர் 2014 (17:49 IST)
நடிகர் விஜய் சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பட நிறுவனம் ஒன்று புகார் அளித்துள்ளது.
 
இன்றைய தமிழ் திரையுலகில் வர்த்தக ரீதியாகவும், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களின் மூலமும் தொடர்ச்ச்சியான வெற்றியைக் குவித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் மீது ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
 
அதில், 'தங்கள் நிறுவனம் தயாரிக்கும் வசந்த குமாரன் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்து இருந்தது. இதற்காக முன்பணம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்தில் நடிக்க மறுக்கிறார்' என்று நடிகர் விஜய் சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
 
விஜய் சேதுபதி தற்போது புறம்போக்கு பொதுவுடைமை, வன்மம், ஆரஞ்சு மிட்டாய், இடம் பொருள் ஏவல், மெல்லிசை ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். நயன்தாராவுடன் நானும் ரவடிதான் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil