Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்! – அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் வலியுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (14:59 IST)
தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதியளித்துள்ள நிலையில் சினிமா படப்படிப்புகளுக்கும் அனுமதி அளிக்க திரைத்துறையினர் அமைச்ச்ர் கடம்பூர் ராஜூவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அனைத்து தொலைக்காட்சிகளிலும் மெகாத்தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளன.

இந்நிலையில் சினிமா படப்பிடிப்புகளை தொடங்குவதற்கு அனுமதி வேண்டி திரைத்துறையினர் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா, சுரேஷ் காமாட்சி மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் மனுவை அளித்துள்ளனர்.

அதேசமயம் ஜூலைக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சினிமா படப்பிடிப்புகளுக்கு தளர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments