Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெடித்த மோதல்: கம்பி எண்ணும் பர்த்டே பாய்!

Webdunia
புதன், 27 மே 2020 (09:04 IST)
சீர்காழியில் பிறந்தநாள் விழா கொண்டாடிய கூட்டத்தினரிடையே எழுந்த மோதலில் அடிதடி சம்பவங்கள் நடந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நள்ளிரவில் கேக் வெட்ட அவரது நண்பர்கள் முடிவு செய்துள்ளனர். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து சாலையில் கேக் வெட்டி கொண்டாடியபோது கூச்சலிட்டுள்ளனர்.

இதனால் கடுப்பான அதே தெருவை சேர்ந்த சிவராஜ் என்பவர் நள்ளிரவில் கூச்சலிட்டது குறித்து தட்டி கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் பெண்கள் உட்பட 10 பேர் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார் பிறந்த நாள் கொண்டாடிய விஜய் உள்ளிட்ட 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எதிர்பாராமல் நடந்த இந்த கைகலப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments