Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கைகலப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கைகலப்பு
, சனி, 17 அக்டோபர் 2015 (17:53 IST)
மனிதநேய மக்கள் கட்சியின் கூட்டத்தில் இரண்டு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் கோவையில் நடைபெறுவதாக இருந்த பொதுக்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு வேறொரு தேதியில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில்  ஜவஹிருல்லா, தமிமுன் அன்சாரிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி இரண்டாக பிரிந்ததுள்ளது. 

இந்நிலையில், கோவையில் அந்தக் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.  ஆனால் கூட்டம் துவங்குவதற்கு முன்பே தமிமுன் அன்சாரியின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரண்டு தரப்பிற்கும் இடையே கைகலப்பு எற்பட்டது. மேலும் நிர்வாகிகள் நீக்கப்பட்டதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என  தமிமுன் அன்சாரியின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கூச்சலிட்டனர். இதையடுத்து இந்தக் கூட்டம் வேறொரு தேதியில் நடைபெறும் என மனிதநேய மக்கள் கட்சி அறிவிக்கப்பட்டது.
 
அப்பொழுது, செய்தியாளர்களை சந்தித்த ஜவஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சிக்கு எதிராக சதிச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil