Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்தியால் குத்திய 9ஆம் வகுப்பு மாணவர்கள் கைது

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (14:17 IST)
தூத்துக்குடியில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்களுக்கு கத்திக்குத்து. இதில் காயடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 

 
தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியை சேர்ந்த பொன்திவாகர் மற்றும் ரவீந்திரராஜ் இருவரும் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். சம்பவத்தன்று இருவரும் வழக்கம் போல் பள்ளிக்கு பேருந்தில் சென்றுள்ளனர். 
 
பேருந்தில் இருந்த 4 பள்ளி மாணவர்கள், பொன்திவாகர் மற்றும் ரவீந்திரராஜை கத்தியால் குத்தினர். பேருந்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தப்பி ஓடிய அந்த 4 மாணவர்களையும் பிடித்தனர். 
 
இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த 4 மாணவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
விசாரனையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் 9 ஆம் வகுப்புதான் படிக்கிறார்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களுள் என்ன பிரச்சனை என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! சர்ச்சையில் சிக்கிய மாநகராட்சி..!!

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்.. கைது செய்யப்பட வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments