Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்மமான முறையில் காட்டு யானை பலி.! வனத்துறை அதிகாரிகள் விசாரணை..!!

Senthil Velan
வெள்ளி, 12 ஜனவரி 2024 (12:39 IST)
மேட்டுப்பாளையம் அருகே மூலையூர் வனப்பகுதியில் மர்மமான முறையில் பெண் காட்டு யானை உயிரிழந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்
 
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதியான மூலையூர் பகுதியில் விவசாய நிலத்தை ஒட்டிய வனப்பகுதி அமைந்துள்ளது. அடிக்கடி காட்டு யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
ALSO READ: பாஜக பிரமுகர் உள்பட 3 பேருக்கு சிறை.! அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.!!
இந்த நிலையில் மூலையூர் கிராமத்தில் விவசாய நிலத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து விவசாயிகள், சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 
 
அதன் பேரில் அங்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த  பெண் காட்டு யானைக்கு 5 வயது இருக்கும் என தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே யானையின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments