Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் உயரதிகாரிகள் செக்ஸ் தொல்லை: பெண் போலீஸ் தற்கொலை முயற்சி!

போலீஸ் உயரதிகாரிகள் செக்ஸ் தொல்லை: பெண் போலீஸ் தற்கொலை முயற்சி!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (12:51 IST)
காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் தற்கொலை செய்து கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆண் போலீஸ்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு தருவது ஆங்காங்கே நடைபெறுகிறது.


 
 
இந்நிலையில் தலைநகர் சென்னையில் ஆயுதப்படை போலீசாக பணி புரியும் பெண் ஒருவர் உயரதிகாரிகளின் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வரும் 27 வயதான பெண் இந்துமதி சென்னை எழும்பூர் நரியங்காடு குடியிருப்பில் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் நேற்று தனது வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை எடுத்து தற்கொலைக்கு முயன்று மயங்கி விழுந்திருக்கிறார்.
 
மயங்கிய நிலையில் இருந்த இந்துமதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட இந்துமதியிடம் நடத்திய விசாரணையில் தான் அழகாக இருப்பதால் உயரதிகாரிகள் பலர் தனக்கு தொல்லை தருவதாக கூறினார்.
 
மேலும், இதனால் என்னால் வேலை செய்ய முடியவில்லை. பெரிய பிரச்சனை எதுவும் இதனால் ஏற்படும் முன்னர் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளவே தற்கொலை முடிவை எடுத்ததாக கூறினார். இதனையடுத்து இந்துமதி மீது தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்