Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளின் காதலுக்கு உதவிய இரு பெண்களை கொலை செய்ய முயன்ற தந்தை

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (05:51 IST)
தனது மகள் காதல் பிரச்னையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதை அடுத்து அந்த இளம்பெண்ணின் தந்தை, மகளின் காதலுக்கு உதவிய இரண்டு பெண்களை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

 
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த வடக்கு உப்பூரை சேர்ந்தவர் நடராஜன் என்பவரது மகள் ரம்யா. இவர், ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள வாலிபருடன் ரம்யாவிற்கு காதல் ஏற்பட்டு உள்ளது.
 
அவருடன் அடிக்கடி பெற்றோருக்கு தெரியாமல், தனது தோழிகளின் செல்போனில் அந்த வாலிபருடன் பேசி வந்துள்ளார். ஒருகட்டத்தில் இந்த விஷயம் ரம்யாவின் பெற்றோருக்கு தெரியவர மகளை கண்டித்துள்ளனர். மேலும், அவரது தோழிய்களையும் எச்சரித்து உள்ளனர்.
 
இதன் காரணமாக ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனையடுத்து ரம்யா தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி ரம்யா உயிரிழந்தார்.
 
இதனையடுத்து தனது மகள் காதலிப்பதற்கு செல்போன் கொடுத்து உதவிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளம் பெண் மாதவி மற்றும் அவரது பாட்டி சுப்பு லெட்சுமி ஆகியோரை நடராஜன் அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளார்.
 
இதில் படுகாயமடைந்த 2 பெண்களும், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முத்துப்பேட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட நடராஜனை தேடிவருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதுகலை மருத்துவ பயிற்சி மாணவர் விஷ ஊசி போட்டு தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்..!

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் தகவல்..!

பைபிள் படிப்பதால் தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திடாத ஜெகன்மோகன்: சந்திரபாபு நாயுடு

இனி திராவிட மண்ணுக்கு நீயே துணை.! உதயநிதிக்கு செந்தில் பாலாஜி வாழ்த்து..!!

உதயநிதி துணை முதல்வராவதால் தமிழ்நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது: எல்.முருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments