Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளை கர்ப்பமாக்கி கேரளாவிற்கு தப்பிச் சென்ற தந்தை

மகளை கர்ப்பமாக்கி கேரளாவிற்கு தப்பிச் சென்ற தந்தை
, புதன், 9 மார்ச் 2016 (11:59 IST)
மதுரை அருகே தந்தை ஒருவர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு கேரளாவிற்கு தப்பிச் சென்றவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
 

 
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள வெள்ளாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (37). இவருக்கும் திருப்பத்தூர் அருகே ஒழுகமங்கலத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும் திருமணமாகி 15 வயது உள்ள ஒரு மகள் உள்ளார்.
 
மாணிக்கத்திற்கும், பஞ்சவர்ணத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, பஞ்சவர்ணம் அவரது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில், தனது மகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால், நெற்குப்பை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக மகளை அழைத்து சென்றார்.
 
மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த போது, சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியிடம் விசாரணையில் நடத்திய போது அவரது தந்தை மாணிக்கம் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
 
இது குறித்து தாயார் பஞ்சவர்ணம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மாணிக்கம் கேரளாவில் கொத்தனார் வேலை பார்த்து வந்ததை அடுத்து, தற்போது அவர் கேரளாவிற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil