Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு ஏன் இல்லை? விவசாயிகள் வருத்தம்!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (13:29 IST)
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு 20 பொருட்கள் அடங்கிய துணிப்பை பரிசாக கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது...
 
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 2022 ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு கீழ்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார். 
இந்த தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிபருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகை பொருட்கள் அடங்கிய துணிப்பை 215,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 88 கோடி செலவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
2022 தைப் பொங்கல் கொண்டாட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு கொள்முதல் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் கரும்பு சாகுபடி செய்த நிலையில் பட்டியலில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments