Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க தமிழ்ச்செல்வனுக்கு விவசாயிகள் எதிர்ப்பு.. பிரச்சாரம் செய்யாமல் திரும்பிய சோகம்..!

Mahendran
சனி, 13 ஏப்ரல் 2024 (14:35 IST)
தேனியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற தங்க தமிழ்செல்வனுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் பிரச்சாரம் செய்யாமல் திரும்ப சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தேனி தொகுதியில் திமுக வேட்பாளராக தங்கத்தமிழ் செல்வன் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து பாஜக கூட்டணி கட்சியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இருவருக்கும் இந்த தொகுதிகள் கடும் போட்டியின் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில் நேற்று தங்கத்தமிழ்செல்வன் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்தார். 
 
அப்போது பூமாலைகுண்டு என்ற கிராமத்தில் பிரச்சாரம் செய்தபோது அவருக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பு பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினோம், முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் ஆகியோரும் போராட்டங்களை நடத்தினார்கள்
 
 ஆனால் அரசாணைப்படி நீர் திறக்கும் என்று திமுக அரசு வாக்குறுதி கொடுத்த,து ஆனால் மிகவும் தாமதமாகவே நீரை திறந்தது என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர். தங்கத்தமிழ் செல்வனுக்கு விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்த நிலையில் ஒலிபெருக்கி இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனை அடுத்து தங்க தமிழ்ச்செல்வன் பிரச்சாரம் செய்யாமல் திரும்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments