Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் நலன் காக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் நலன் காக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (23:13 IST)
திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் நலன் காக்கப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

 
ஈரோட்டில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
 
ஈரோட்டில் நடைபெற்ற விவசாயிகள் "கடன் விடுதலை மாநாட்டில்" பங்கேற்றுப் பேசினேன். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது, 7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தது உள்ளிட்ட கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தேன்.
 
இப்போது நடைபெறுகின்ற அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது மற்றும் எலிக்கறி சாப்பிடும் கொடுமைக்கு ஆளானது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விளக்கிப் பேசினேன். விவசாயிகளின் நலனுக்கு திமுக கழகம் என்றும் துணை நிற்கும் என்று உறுதியளித்து, விரைவில் சட்டமன்றத் தேர்தலுக்கு வெளியாகும் கழக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் நலனுக்கும், விவசாயத்தின் வளர்ச்சிக்கும் உரிய திட்டங்களை தலைவர் கருணாநிதி அறிவிப்பார் என்று தெரிவித்தேன் என்றார். 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments