மின்சாரம் தாக்கி விவசாயி பலி!

J.Durai
சனி, 25 மே 2024 (16:10 IST)
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்த ஆலடி வயது 65. இவர்  காலை கடன் முடிப்பதற்காக முள்ளிப்பள்ளம் குருவித்துறை ரோட்டில் உள்ள தனியார் தோப்பில் சென்றுள்ளார்.
 
எதிர்பாராத விதமாக அங்கு குறுக்கே சென்ற மின் வயர் தென்னை மரத்தில் உரசியதில் ஆலடிமீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து விட்டார். 
 
இது குறித்து முள்ளிப்பள்ளம்கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், கிராம உதவியாளர் ராமமூர்த்தி ஆகியோர் காடுபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 
 
இதன் பேரில் காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 
இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெய் ஸ்ரீ ராம் சொன்னா ரூ.500 தள்ளுபடி!.. பிரபல மருத்துவரின் அறிவிப்பால் பரபரப்பு!...

திருப்பூரில் விஜய் ரோட் ஷோ ரத்து!.. வெயிலில் காத்திருந்த மக்கள் ஏமாற்றம்!..

பழைய ஓய்வூதியம்!.. போலீஸுக்கு 25 ஆயிரம் சம்பளம்!.. திருப்பூரில் விஜய் வாக்குறுதி..

விஜயை பாக்க போய் 5 பவுன் செயின் போச்சே!.. கதறி அழுத பெண்!.. கோவையில் பரபரப்பு!...

திமுகவுக்கு ஓட்டுபோட்டாதான் ரூ.8 ஆயிரம் டோக்கன்!.. ஆதரத்தை வெளியிட்ட இயக்குனர்..

அடுத்த கட்டுரையில்
Show comments