Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.30 ஃபேண்டா, இப்போது ரூ.10. இருப்பினும் வாங்க ஆளில்லை

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (06:14 IST)
சென்னை மெரீனாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் வெற்றியாக இல்லாமல் வெளிநாட்டு குளிர்பானங்களை குடிப்பது தேக ஆரோக்கியத்துக்கு கெடுதல் என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டது.,




இதனால் பல திரையரங்குகள், வணிக வளாகங்கள் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை என அறிவித்தன. மேலும் தமிழக வணிகர் சங்கமும் வரும் மார்ச் 1முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை விற்பனை செய்ய போவதில்லை என்று அறிவித்தது.

இந்நிலையில் கடந்த மாதம் தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை 75% குறைந்துவிட்டதாக வணிகர்கள் தகவல் அளித்துள்ளனர். இதற்கு பதிலாக பாரம்பரிய பானங்களான இளநீர், மோர் ஆகியவற்றின் விற்பனை பலமடங்கு உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 30 ரூபாய்க்கு விற்று வந்த ஃபேண்டா குளிர்பானம் தற்போது வியாபாரம் முடங்கியதால் 10 ரூபாய்க்கு விற்று வருவதாகவும், இருப்பினும் பொதுமக்கள் அந்த பானங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் குறைந்த விலை என்பதற்காக பூச்சிமருந்து கலநத பானங்களை யாரும் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றன

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments